ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப் சொல்வது இருக்கட்டும்; ஈரான் என்ன சொல்கிறது? தாக்குதலை நிறுத்துகிறதா?

“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக, பாதுகாப்பாகத் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரம் போர் நிறுத்தம்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ட்ரம்பின் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பிற்கு ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். ட்ரம்ப்

அந்த அறிக்கை கூறியிருப்பதாவது…
“ஈரான் சார்பாக, என்னுடைய அன்புள்ள சகோதரர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் முனிரின் போர் நிறுத்தத்திற்கான அயராத உழைப்பிற்கு நன்றியும், பாராட்டுகளும். பிரதமர் ஷெரீபின் சகோதரத்துவமான கோரிக்கைக்கும்… அமெரிக்காவின் 15 பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டும், அமெரிக்க அதிபர் ஈரானின் 10 பரிந்துரைகளைப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாலும்… ஈரான் சார்பாக இதை நான் கூறுகிறேன்…ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்களுடைய சக்தி வாய்ந்த படைகளும் தற்காப்பு தாக்குதல்களை நிறுத்தும்.இரண்டு வாரங்களுக்கு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக பயணிக்க முடியும்”.

Statement on behalf of the Supreme National Security Council of the Islamic Republic of Iran: pic.twitter.com/cEtBNCLnWT— Seyed Abbas Araghchi (@araghchi) April 7, 2026

Source link