இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரான் மதிக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆனால் திடீர் யு டர்ன் அடித்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் என்ற திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று அறிவித்தார்.
மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வாக விவாதம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடருவதற்காக தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
