ஈரோட்டில் கே.பி.சுந்தராம்பாள் சிலை திறப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை பழம்பெரும் நடிகை மற்றும் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள் திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 1908ம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாள் பிறந்தார். கலைத்துறையில் பல சாதனைகளை செய்த இவர், கடந்த 1980ம் ஆண்டு சென்னையில் காலமானார். இவரது சொந்த ஊரில் திருவுருவ சிலையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மகளிர் தினமான இன்று கொடுமுடியில் 6.5 அடி உயரமுள்ள திருவுருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார். இதற்கு கே.பி.சுந்தராம்பாள் வாரிசுகள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

Source link