நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, மத்திய அரசை கண்டித்தும், கல்வித்துறை அமைச்சர் தன்வந்திரி பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு போராட்டம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்தை போராட்ட காரர்கள் முற்றுகையிட முயன்றனர். போலீஸார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். மேலும் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடந்தப்பட்டது. இருப்பினும் கலைந்து போகாத இளைஞர்கள் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்று திரண்டு, இரவு முழுவதும் முழக்கங்களை எழுப்பி போராட்டம்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற சலோ சன்சத் பேரணியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்த பேரணியில் அவர் இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி போராட்டக்காரர்களிடம் உரையாற்றினார்.
திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி
போராட்டத்தில் பேசிய பிரகாஷ் ராஜ் உண்மையைப் பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். நம்பிக்கைக்காக குரல் கொடுக்க மக்கள் ஏன் பயப்பட வேண்டும்? உயிருடன் இருக்கும் போதே மௌனமாக வாழ விரும்பவில்லை. மாணவர்கள் நீதிக்காக போராடும் நேரத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல என்று தெரிவித்தார்.
நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பிரகாஷ் ராஜ், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பு ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திலும் நடிகர்கள் ஷபானா ஆஸ்மி, பூனம் பாண்டே உள்ளிட்டோருடன் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது மேடையில் இருந்து மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர் பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு
மேலும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவரின் கையை ஷபானா ஆஸ்மி அன்புடன் முத்தமிட்ட காட்சியும் கவனம் பெற்றது.
சோனம் வாங்சுக்குடன் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்தியபோதும், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷபானா ஆஸ்மி நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் ஹிரித்திக் ரோஷன், சோனாக்ஷி சின்ஹா, தியா மிர்சா, ஓமி வைத்யா, சீமா பஹ்வா, சின்மயி ஸ்ரீபாதா உள்ளிட்ட பலரும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பேரணி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியபோது, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் காவலில் எடுத்ததாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பாதுகாப்புப் படையினர் பலம் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
மத்திய டெல்லியில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். பேரணி நாடாளுமன்றம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி முன்னேறியதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம் முழுவதும் மாணவர்களுடன் இணைந்து செயல்பட்ட பிரகாஷ் ராஜ், அநீதிக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். அவருடன் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்ததால், நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பான இந்த போராட்டம் நாடு முழுவதும் மேலும் கவனம் பெற்றுள்ளது.
