பல்லாவரம்: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.19.63 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 24 பெட்டிகளில் மொத்தம் 13 கிலோ தங்க நகைகள், 34 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தம் ரூ.19.63 கோடி மதிப்பிலான நகைகளை பிரபல நகைக்கடைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது.
