உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.20 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

பல்​லா​வரம்: சென்னை பல்​லா​வரம் அடுத்த அனகாபுத்​தூரில் உரிய ஆவணங்​கள் இல்​லாமல் காரில் எடுத்​துச் செல்​லப்​பட்ட ரூ.19.63 கோடி மதிப்​பிலான தங்​கம், வெள்ளி நகைகளை தேர்​தல் நிலைக் கண்​காணிப்பு குழு​வினர் பறி​முதல் செய்​தனர்.

சென்னை பல்​லா​வரம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அனகாபுத்​தூர் பகு​தி​யில் தேர்​தல் நிலை கண்​காணிப்பு குழு​வினர் நேற்று காலை வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, ஒரு வாக​னத்தை நிறுத்தி சோதனை செய்​த​போது, 24 பெட்​டிகளில் மொத்​தம் 13 கிலோ தங்க நகைகள், 34 கிலோ வெள்ளி நகைகள் என மொத்​தம் ரூ.19.63 கோடி மதிப்​பிலான நகைகளை பிரபல நகைக்​கடைக்கு எடுத்​துச் செல்​வது தெரிய​வந்​தது.

Source link