திருவனந்தபுரம்: பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதளம் மீது கேரள சைபர் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் பிரதமர் மோடி, தலைமைத் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை அவமதிக்கும் விதமாக ஏஐ வீடியோ தயார் செய்யப்பட்டு அது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
