`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!’ – அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்.

தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் அன்புமணி ராமதாஸ், ” கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் எல்லா விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அது எல்லாவற்றையும் நாம் கடந்து வந்துவிடுவோம்.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

ஐயா (ராமதாஸ்) ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. நமக்கு எல்லாம் குலதெய்வம், குலவிளக்கு ஐயா தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஐயா இன்றைக்கு 10 வயது குழந்தை மாதிரி ஆகிவிட்டார்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு சுற்றி இருக்கும் தீய சக்திகள், துரோகிகள், திமுக கைக்கூலிகள் எல்லாம் சேர்ந்து அவர் மனதை கெடுத்து எங்கள் குடும்பத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து இந்தக் கட்சி, தமிழ் சமுதாயம், பெண்கள் பாதுகாப்பு எல்லாம் நமக்கு முக்கியம். ஆனால் நான் பலமாக இருக்க நீங்கள் தான் காரணம். தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தலைவர்களுக்கு கிடைக்காத தம்பி, தங்கைகள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link