இதே காரணத்திற்காக, தவெக மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின் போது எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தவெக வேட்பாளர் அருண்குமார், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், தவெக வேட்பாளரை கடத்தி சென்று விட்டதாக கூறி அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சமாதானப்படுத்தினர்.
திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய அருண்குமார், திடீரென தவெகவில் இணைந்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவை வேண்டுமென்றே கவனக்குறைவாக தாக்கல் செய்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
