நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமின்றி கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய எம் எல் ஏக்கள் முன்னாள் அமைச்சர்கள் என அடுத்தடுத்து தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் உருவான அதிருப்தி அணி
மேலும் தேர்தலில் தோல்விக்கான காரணத்தை கண்டறிய எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையிலான அணியினர் போர் கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்து அனைத்து விதமான பதவிகளில் இருந்து நீக்கினார்.
இந்த சூழலில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய தலை மேலான அதிர்ச்சி அணியினர் சில வாரங்களாக அமைதியாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தன்னுடைய தரப்பை வலுப்படுத்த மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி
அதிமுகவில் தற்போது நிலவும் அமைதி
குறிப்பாக அதிருப்தி அணியில் இருந்த எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அணி பலவீனம் அடைந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 25 எம்எல்ஏக்கள் அதிருப்திய அணியில் இருந்தனர். முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் உட்பட ஆறு பேர் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பழனிசாமியை பலர் பலவீனப்படுத்துவதாக நினைத்து அதிருப்தி அணியை சுக்குநூறாக்கிவிட்டார் முதலமைச்சர் விஜய். அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேல் நடவடிக்கைக்கு டெல்லி பாஜக தலைமை ஆதரவளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த புதிய வியூகம்
இதனால் பலவீனமான அதிருப்தி அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது இந்த அமைதி ஓராண்டு நீடிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இடைத்தேர்தல் நடந்தால் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற முடியாது என அதிரத்தி அணியினர் நினைக்கின்றனர்.
அப்படி ஒரு சூழல் உருவாகும் போது எடப்பாடி பழனிசாமி தரப்பு பலவீனமாகும் அந்த சமயத்திற்காக அதிருப்தி அணியினர் காத்திருக்கின்ற அதன்படி தான் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஓராண்டு காத்திருக்க முடிவு
மேலும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடக்கிறது. அதில் தன் ஆதரவாளர்களை பங்கேற்க எஸ்பி வேலுமணி வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காத்திருப்புக்கு சி.வி சண்முகம் சம்மதிக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எனவே 24 ஆம் தேதி நடக்கும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தன் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்க கூடாது என சி.வி. சண்முகம் கூறி இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மேலும் இடைத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அதிமு முக்கிய புள்ளிகள் நகர்வு அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
