புதுடில்லி:எல்.பி.ஜி., சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் எத்தனாலில் எரியும் சமையல் அடுப்பை தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு தானிய எத்தனால் தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது:
மேற்காசிய போரால் வீடுகள், உணவகங்கள் மற்றும் தொழில்துறைகளில் எல்.பி.ஜி., சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது.
எல்.பி.ஜி., எரிவாயுவுக்கு முழுதுமாக அன்னிய நாடுகளையே சார்ந்திருக்கிறோம். இதை குறைக்கும் வகையில் எத்தனாலில் எரியும் அடுப்புகளை கொண்டு வருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், எத்தனாலில் எரியும் அடுப்புகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், பாதுகாப்பு அம்சங்கள், பொருளாதார ரீதியாக கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்டவற்றை ஆராய வேண் டும்.
ஏனென்றால் மத்திய அரசின் எத்தனால் கொள்கை மற்றும் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தின் வாயிலாக நாட்டில் எத்தனால் உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
