“எந்த போராட்டத்துல மக்களுக்காக நின்னு இருக்கீங்க…”

இயக்குநர் சேரன் இந்த தேர்தலுக்கான தனது ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு தெரிவித்திருந்தார். அதாவது நாம் தமிழர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது என்றும் சமூக தீங்குகளை ஒழிப்பது என்றும் நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது என்றும் ஒரு நீண்ட பதிவை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இப்போது தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், “புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.  உங்க இருவருக்கும் என்ன பிரச்சனைன்னு எங்களுக்கு தெரியல. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன். அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி. அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய். நாங்களும் சப்போர்ட் பன்றோம். சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க  மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க.  

எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல. மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்… உழைப்பை முதல்ல மதிங்க. உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல. இனிமேலும் மக்கள்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன பிரச்னைன்னு அலசி ஆராய்ங்க. பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை. மக்கள் களம். ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம். இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம். மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து மற்றொரு பதிவில், “விஜய்யின் அன்பு ரசிகர்களுக்கு… நானும் விஜயை ரசித்தவந்தான். அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான்.  ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல. மக்களின் வாழ்க்கை. அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்பட போவது நாம்தான். நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதை படிக்கும் பொது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி  என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும். நல்ல விசயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான். நீங்க பேசுங்க தம்பிகளா. நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான். கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. 



Source link