எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்த மக்களவையில் நவாஸ்கனி வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்தி தர வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார். மக்களவையின் நிதி மசோதாவில் பங்கேற்று பேசிய அவர், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி பேசியது: “அடுக்கடுக்கான வரிகளுக்கும், உயர்ந்து வரும் விலைவாசி, கடும் பொருளாதார நெருக்கடியில் பொது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு நேரடியாக எந்தப் பயனும் இல்லாத நிதி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது, வசதியானவர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு எந்த அளவு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவு நடுத்தர மக்களின் சுமையை அதிகரித்துள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கை, சாமானிய மக்களுக்கும், உங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சரிசெய்ய நீண்ட காலமாக நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும். ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. அதில் 18 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம்.

Source link