எரிபொருள் இல்லாமல் 5000 வகை உணவு தயாரித்து அசத்தும் பெண்

கொடைக்கானலில் எரிபொருள், கியாஸ், விறகு அடுப்பு, மின்சாரம் போன்ற எதுவும் இல்லாமல் பல்வேறு ஆரோக்கிய உணவுகளை தயாரித்து அசத்தும் பெண்மணி பொதுமக்களுக்கும் இது குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

தற்போது நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுபாடு காரணமாக பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் தேநீர் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. நகர் புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் இது போன்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுப்பில்லாமல் அதிவேக சமையல் என்ற கோணத்தில் புதிய முயற்சியில் கொடைக்கானலை சேர்ந்த கிரிஜா என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவர் பிரபல சமையல் கலைஞர் தாமுவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

தற்போது சிலிண்டர் எரிவாயு தட்டுபாடு காரணமாக பல்வேறு சிரமத்தில் இருந்துவரும் பொதுமக்களுக்கு அதை சமாளிக்கும் விதமாக எந்த ஒரு எரி பொருள்களும் இல்லாமல் தமிழரின் இயற்கை முறையாக காய்கறிகள், சத்தான உணவு மூலப்பொருட்களை கொண்டு எந்த நேரத்திலும் சமைக்கலாம் என்ற கோணத்தில் பிரியாணி, இட்லி, பொங்கல், காபி என 5000 வகையான உணவு வகைகளை அடுப்பில்லாமல் சமைத்து வருகிறார். மேலும் ஒரே நேரத்தில் அதிக படியாக 1500 நபர்களுக்கு சமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source link