ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பல மாநிலங்களில் வயதானவர்களிடம் பண மோசடி செய்த ஆந்திர இளைஞர் கைது

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக வங்கி ஏடிஎம் மையத்​தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர். இதில் முதி​ய​வரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடு​பட்​டது ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த சிடா​தாலா சுனில் (27) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரிட​மிருந்து ஒரு செல்​போன், 79 ஏடிஎம் கார்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. போலீ​ஸாரின் விசா​ரணை​யில், சிடா​தாலா சுனில் ஆந்​திர மாநிலத்​தில் பெட்​ரோல் பங்​க்கில் வேலை செய்து வந்​துள்​ளார்.

இவர் ஏடிஎம் மையங்​களில் பொது​மக்​கள் மறந்து விட்​டுச்​செல்​லும் ஏடிஎம் கார்​டு​களை எடுத்து வைத்​துக்​கொண்டு பார்​வையற்ற மாற்​றுத் திற​னாளி​கள், வயதானவர்​களைக் குறி​வைத்து ஏமாற்றி பணத்​தைத் திருடி வந்​தது தெரிந்​தது. இதே​போல பல்​வேறு மாநிலங்​களில் கைவரிசை காட்​டி​யுள்​ளார் எனத் தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

Source link