டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹமத்நிஜாத் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஈரான் மதத் தலைவரும், ஆட்சியாளருமான கமேனியை குறிவைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹமதுநிஜாத்தும் கொல்லப்பட்டுள்ளார். தெஹ்ரானின் நர்மாக் மாவட்டத்தில் அவர் வசித்த கட்டடம் மீதும் ஏவுகணைகள் விழுந்தன. அவருக்கு ஈரான் படைகள் பாதுகாப்பு அளித்து வந்தன. இந்த தாக்குதலில், அஹமதுநிஜாத் கொல்லப்பட்டு உள்ளார். மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
