ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் வரம்பை குறைத்த பி.என்.பி.,

‘பி ளாட்டினம் மற்றும் கோல்டு’, ‘பிரீமியம் மற்றும் பிசினஸ்’ டெபிட் கார்டுகளுக்கான தினசரி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் வரம்பை, 50 சதவீதம் வரை குறைப்பதாக, ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘பிளாட்டினம் மற்றும் கோல்டு’ கார்டுகளுக்கான வரம்பு 1,00,000 ரூபாயிலிருந்து, 50,000 ரூபாயாகவும், ‘பிரீமியம் மற்றும் பிசினஸ்’ டெபிட் கார்டுகளுக்கான வரம்பு 1,50,000 ரூபாயிலிருந்து, 75,000 ரூபாயாகவும் குறைத்துள்ளது.

இந்த புதிய மாற்றம், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. வங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேநேரம், கடைகளில் ‘ஸ்வைப்’ செய்யும் ‘பி.ஓ.எஸ்., மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்’ வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அட்டவணை: டெபிட் கார்டு வகைகள் பழைய வரம்பு (தினசரி) புதிய வரம்பு (தினசரி) பிளாட்டினம் & கோல்டு கார்டுகள்: ரூ.1,00,000 ரூ.50,000 ரூபே என்.சி.எம்.சி., பிளாட்டினம் (உள்நாடு/சர்வதேசம்) ரூபே வுமன் பவர் பிளாட்டினம் ரூபே பி.என்.பி., பலாஷ் ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்.சி.எம்.சி., மாஸ்டர்கார்டு பிளாட்டினம் / பிளாட்டினம் ரைஸ் விசா கோல்டு கார்டு பிரீமியம் மற்றும் பிசினஸ் கார்டுகள்: ரூ.1,50,000 ரூ.75,000 ரூபே செலக்ட் ரூபே செலக்ட் நியோ ரூபே செலக்ட் எக்செல் விசா சிக்னேச்சர் மாஸ்டர்கார்டு பிசினஸ் கார்டு

Source link