சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுடன் தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது: “கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்கும் என நான் கருதவில்லை. அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செட்டிலாக சற்று நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். கடந்த 2024 சீசன் முதல் அவர் அணியை வழி நடத்தி வருகிறார்.
அவர் குறித்து யார் என்ன சொன்னாலும் பிரச்சினை இல்லை. தனது பாணியில் அவர் அணியை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் அதில் அவரது செயல்பாடு நமக்கு தெரியவரும். அந்தப் பணியை அவருக்கு சில ஆண்டுகள் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர் சரியில்லை என்ற எண்ணம் வந்தால் நம் வசம் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.
