இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஷ்ரா, என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மேற்கு வங்க அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, “மத்திய அரசின் அமைப்பான அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மாநில அரசுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய அனுமதிப்பது கூட்டாட்சி அமைப்புக்கு ஆபத்தாகிவிடும். இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறைக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. இது சிபிஐ, போதை பொருள் தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகிவற்றுக்கும் பொருந்தும்” என்று வாதிட்டார்.
