எனவே அரசு ஊழியர் மகப்பேறு விடுமுறை தொடர்பான அரசாணை அடிப்படையில் விடுமுறை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இம்மனுவை தனி நீதிபதி விசாரித்து, எனக்கு 270 நாட்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுகாதாரத் துறை செயலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.அப்போது அரசு தரப்பில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் 6 மாதம் விடுப்பு தர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கைமுடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
