ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

எனவே அரசு ஊழியர் மகப்​பேறு விடு​முறை தொடர்​பான அரசாணை அடிப்​படை​யில் விடு​முறை வழங்க அரசுக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தேன். இம்​மனுவை தனி நீதிபதி விசா​ரித்​து, எனக்கு 270 நாட்​கள் ஊதி​யத்​துடன் மகப்​பேறு விடு​முறை வழங்க உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி சுகா​தா​ரத் ​துறை செயலர் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்டது.

இதனை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தாரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.கருணாநிதி வாதிட்டார்.அப்போது அரசு தரப்பில், ஒப்​பந்த முறை​யில் பணி​யாற்​றும் செவிலியர்​களுக்​கும் 6 மாதம் விடுப்பு தர அரசாணை பிறப்பிக்​கப்​பட்​டுள்ள​தாக தெரிவிக்கப்பட்​டது. இதையடுத்து வழக்கைமுடித்து வைத்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

Source link