தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத கட்சி தேமுதிக. எப்படி கேப்டன் மீது குடிக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகிய உள்ளார் என்று தவறாக விமர்சனத்தை முன் வைத்தார்களோ.. அதேபோல தற்போது என் மீதும், கழகத்தின் மீதும் பேரம், பெட்டி என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

நான் கார் வாங்கியுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?
மக்களுக்காக 100 சதவிகிதம் உழைப்பை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு பின்னால் இருந்தவள் நான் என்பது இந்த ஊர் அறியும்.
