கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

திருச்சி: ” திமுக தனக்கு அளிக்கப்பட்ட கடமை, பொறுப்பை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்துள்ளது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திருச்சியில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:இரண்டு ஆண்டுகள் முன்பாக திருச்சி அரங்கன் முன்பு தலைவணங்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தெய்வீக அனுபவம், கம்ப ராமாயணத்தை கேட்டது என் காதில் இன்றும் ஒலித்து கொண்டு உள்ளது.

திருச்சி நெஞ்சுரம் மற்றும் நம்பிக்கை நிறைந்த நிலம் மருது சகோதரர்கள் வீரத்தை பார்த்த பூமி.கார்கில் போரின் தனது உயிரை தியாகம் செய்துபோரிட்ட மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்.தமிழகம் மற்றும் அதன் கலாசாரத்துக்கு மதிப்பு அளிப்பதில் பாஜ அரசு முன்னணியில் உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சிபிஆர் துணை ஜனாதிபதியாக உள்ளார். சில மாதங்களுக்கு முன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை பெருமைபடுத்தும் வகையில் தபால் தலையை வெளியிட்டார். இது தமிழகத்துக்கு பெருமிதம் சேர்த்தது.

தமிழகத்தின் பேரணிகளாக இருக்கட்டும் இந்தியா முழுவதும் சந்திப்புகள், காசி தமிழ் சங்கமம், தமிழ் மக்களோடு இணைப்பு ஏற்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவேன். மாநிலத்தின் நாடித்துடிப்பை உணர முடிகிறது. ஆடி மாதத்தில் காவிரி பெருகுவது போல், தமிழக தேர்தலில் மாற்றத்திற்கான ஆசை வேகமாக பயணிக்கிறது அதேபோல், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறிய மாநிலம் தீர்மானித்துவிட்டது. ஒரு குடும்பத்துக்காக மட்டும் அல்ல, அனைத்து குடும்பத்துக்காகவும் செயல்படும் அரசை மக்கள் விரும்புகின்றனர். தேஜ கூட்டணியால் மட்டும் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் அறிந்துள்ளனர்.

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களுக்காக திருச்சி வந்தேன். மதுரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.திருச்சியில் 5,650 கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களை துவக்கிவைத்து முடித்து கொண்டு வந்துள்ளேன். தமிழகத்தின் எதிர்காலத்திற்கு பெரிய முதலீடு செய்கிறோம். இந்த திட்டம் முக்கியமான துறைகளுக்கு பல பயனுள்ளவையாக இருக்கும்.

தூய்மையான எரிசக்தி, ரயில்வே, நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் இவற்றில் அடங்கும். இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும்.தமிழகத்தின் கலாசாரமும், கட்டவியலும் உலக மக்களை கவர்ந்துஇழுக்கின்றன. மக்கள் சென்னை வழியாக மட்டும் வரவில்லை. திருச்சி வழியாகவும் வருகின்றனர். திருச்சியில் புதிய முனையம் அமைக்கப்பட்ட பிறகு பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர். நவீனமாக இருக்கும் வகையில், தமிழக கலாசாரத்தோடு தொடர்புடையதாக கூறினர்.

மாநிலத்தின் மிகப்பழமையான விமான நிலையங்களில் ஒன்று மதுரை, தென் மாவட்டத்தன் நுழைவுவாயிலாக மதுரை திகழ்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. உலக நகரங்களில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து அந்த நகரங்களுக்கும் விமான பயணம் தொடரும். இதனால், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மதுரை செல்வதை எளிதாக உணர்வார்கள். விவசாயிகள் தங்களது பொருட்களை நாடு முழுவதும்,உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும்.மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லியை, பாரீஸ் நியூயார்க் நகருக்கு மாலையில் கொண்டு சேர்க்க முடியும்.

தேஜ கூட்டணி அரசை பொறுத்தவரை தமிழகத்தின் முன்னேற்றம் என்பது முக்கியமானது.2014 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் அரசை விட பல மடங்கு அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 3 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது.மாநிலத்தின் நெடுஞ்சாலைகளுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.2004 -14 ல் காங்கிரஸ் திமுக செலவு செய்த தொகையை விட 4 மடங்கு அதிகமானது

தமிழகத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாயை ஊரக பகுதி சாலைகளில் செலவு செய்துள்ளோம். இது காங்கிரஸ் திமுக ஆட்சி செலவு செய்ததை விட 3 மடங்கு அதிகமான தொகை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேஜ கூட்டணி ஆட்சி அமைவது முக்கியம்.

2021 ம் ஆண்டில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், திமுக, தனக்கு வழங்கப்பட்ட கடமை,பொறுப்பை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்தனர். திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரே குடும்பத்தில் இருந்து துவங்கி முடிந்துவிடுகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்ள் மாறலாம், ஆனால், அதிகாரம் ஒரே குடும்பத்திடம் மட்டும் இருக்கிறது.விஞ்ஞான ஊழலுக்கு பெயர் பெற்றது திமுக. ஒரே குடும்ப ஏடிஎம் ஆக தமிழகத்தை மாற்றி உள்ளது.

இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்ஒருவர் வேலைவாங்கி கொடுப்பதாக கூறி பணம் பெற்று பெரிய மோசடியில் சிக்கி உள்ளார்.வேலைகள் பணத்திற்காக விற்கப்படும்போது, நடுத்தர ஏழை எளிய இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகிறது.இந்த நதிகள் அனைத்தும் கடலில் சென்று சேர்வது போல் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. குடும்பச் சொத்தாக மாறுகிறது.

தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு டெல்டா விவசாயிகள் தான் முதுகெலும்பு.நியாயமான விலை,நவீன வசதிகள், சேமிப்பு கிடங்கிற்கு உரித்தானவர்கள். சேமிப்பு கிடங்கு உருவாக்குவோம் என திமுக கூறியது. ஆனால் அந்த சேமிப்பு கிடங்கு எங்கு என விவசாயிகள் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.நெல்லுக்கு வழங்கப்படும் எம்எஸ்பி உயர்த்தப்படும் என்ற திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என விவசாயிகள் கேட்கின்றனர்.

சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், ஆறுகள் பாதிக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்படைகிறது. ஆனால், அதற்கு காரணமானவர்களுக்கு திமுகவின் பாதுகாப்பு கவசம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை அரசியல் என்பது மக்கள் நலனை விடமேலானது. ஏழைகளுக்கான வீடுகளை தாமதப்படுத்தி உள்ளனர். மத்திய அரசை மக்கள் பாராட்டுவார்கள் என்பதே காரணம்.தமிழகத்துக்கு பெரிய திட்டம் வைத்துள்ளோம். பெங்களூரு சென்னை, சென்னை ஐ தராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடங்களை அறிவித்துள்ளோம். இவை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு தமிழகத்தை கொண்டு செல்லும். மத்திய அரசுக்கு பெயர் கிடைப்பதை தடுக்க திமுக முயற்சி செய்கிறது.இதனை செயல்படுத்த, அரசியலை விட மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு தேவை. அத்தகைய அரசை தேஜ கூட்டணி மட்டுமே அளிக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link