கடையநல்லூர்: இல்லத்தரசி திட்டத்திற்காக 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் கொடுத்தால்தான்

கடையநல்லூர்: இல்லத்தரசி திட்டத்திற்காக 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் கொடுத்தால்தான் ஊழல் செய்ய முடியும் என்று திமுகவை இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட அய்யாபுரம் மதுரை-தென்காசி பிரதான சாலையில கூடியிருந்த மககள் முன்பு இபிஎஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்திருக்கிறது. அதிமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் செய்பவை பற்றி அறிவித்தது. அந்த பிரமாண்டமான அறிவிப்புகளைப் பார்த்து திமுகவும் அறிவித்துள்ளனர், 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் கொடுத்தால்தான் ஊழல் செய்ய முடியும். ஆட்சிக்கு வர முடியாது, டோக்கன் கொடுப்பார்களாம்.

உங்களுக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்று அவர்களே சொல்லிவிட்டனர், ஏனெனில் அவர்கள் ஏஜென்சி எடுத்திருப்பார்கள், டோக்கன் திமுககாரரிடம் வாங்க வேண்டும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.

திமுகவில் ஆட்களே இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். செல்லாத நோட்டுக்கு பலன் இல்லை. நாம் தூக்கியெறிந்தவர்கள் 19 பேர் திமுகவில் போட்டியிடுகிறார்கள். இயக்கத்தை உடைக்க எவ்வளவு முயற்சி செய்தார்கள். அத்தனை சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கி அதிமுக வலிமையானது என்றூ நிரூபித்தோம். அதிமுக சொந்தக் காலில் நிற்கிறது, திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றே மாதத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

ஸ்டாலினுக்கு பெட்டி மீதுதான் எப்போதும் கண் இருக்கும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார். தீர்த்தாரா..? அது, எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள்.

ரேஷன் கடையில் இப்போது அரிசி தரம் குறைவாக உள்ளது, கடையில் வாங்குவதுபோல தரமான அரிசி கொடுப்போம். அரிசி ஆலை அதிபர்களை அழைத்துப் பேசினேன். டபுள் பாய்லிங் செய்தால் தரமான அரிசி கிடைக்கும் என்றனர். நவீன ஆலைகள் மூலம் நெல்மணிகள் பராமரிக்கப்பட்டு தரமான அரிசி ரேஷன் கடையில் வழங்கப்படும்,

இவ்வாறு இபிஎஸ் பிரசாரத்தில் பேசினார்.

Source link