கத்தாரில் தவிக்கும் இந்தியர்கள்; தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தோஹா; கத்தாரில் வசிக்காத ஆனால் போரின் காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் விவரங்களை இந்திய தூதகரம் சேகரிக்கும் பணிகளை தொடங்கி உள்ளது.

இது குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்;

பிப்.28ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை கத்தாரில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள், குறுகிய கால விசாவுடன் வந்துள்ளவர்கள், கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அதற்கான இணைப்பில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

கத்தாரில் வசிக்காத அதே நேரத்தில் இங்கு சிக்கித் தவிக்கும் நபர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் விவரஙகளை கண்டறியும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்கனவே தரப்பட்டு உள்ள இணைப்பு இனி செயல்படாது. எனவே forms.gle/A5mqrqjeigBuTUrj9 என்ற இணைப்பை இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link