கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீரர்கள் 8

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர். கடந்த 17ம் தேதி கேஸ்டில் பீக் பகுதியில் திடீரென வீசிய புயலால் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறுகையில், ‘1981ம் ஆண்டு மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது,’ என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்த மிக மோசமான பனிச்சரிவாக இது கருதப்படுகிறது.

Source link