காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: ராகுல் உறுதி

எனவே​தான், ‘மாநில அந்​தஸ்து வேண்​டும்’ என்று கூறுகிறோம். நாங்​கள் அதை கண்​டிப்​பாக தரு​வோம். காங்​கிரஸ் ஆட்​சிக்கு வந்​தால், 6 மாதங்​களில் புது​வை​யில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்​தப்​படும். அடுத்த தலை​முறை தலை​வர்​கள் உள்​ளாட்​சித் தேர்​தல் மூலம் அரசு நிர்​வாகத்​துக்கு வரு​வார்​கள்.

அனைத்து துறை​ பணி​களுக்​கும் 30 சதவீத கமிஷன் பெறப்​படு​கிறது. மது​பான தொழிற்​சாலைகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ரெஸ்டோ பார்​கள், மது​பான கடைகள் வழி​பாட்டு தலங்​கள், கல்வி நிலை​யங்​களுக்கு அருகே அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதை அகற்ற கோரிக்கை வைத்​தும் அரசு செவி சாய்க்​க​வில்​லை.

கோயில் நிலம் கொள்ளை: மக்​களிடம் மட்​டுமல்ல, ஆண்​ட​வனிட​மும் கொள்ளை அடித்​துள்​ளனர். கோயில் நிலங்​கள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டுள்​ளது. சட்ட ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. இரவில், பெண்​கள், குழந்​தைகள் நடமாட முடிய​வில்​லை. பள்​ளி, கல்​லுாரி​களில் போதைப்​பொருட்​கள் பயன்​படுத்​தப்​படு​கிறது. இதுகுறித்து ஆளுநருக்கு தெரிந்​தும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை. புதுவை மக்​களின் உண்​மை​யான குரலை ஒலிக்​கும் அரசை, இந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேர்வு செய்​யுங்​கள்.இவ்​வாறு ராகுல் பேசி​னார்.

Source link