எனவேதான், ‘மாநில அந்தஸ்து வேண்டும்’ என்று கூறுகிறோம். நாங்கள் அதை கண்டிப்பாக தருவோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதங்களில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த தலைமுறை தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசு நிர்வாகத்துக்கு வருவார்கள்.
அனைத்து துறை பணிகளுக்கும் 30 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள், மதுபான கடைகள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன. இதை அகற்ற கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை.
கோயில் நிலம் கொள்ளை: மக்களிடம் மட்டுமல்ல, ஆண்டவனிடமும் கொள்ளை அடித்துள்ளனர். கோயில் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இரவில், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆளுநருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவை மக்களின் உண்மையான குரலை ஒலிக்கும் அரசை, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யுங்கள்.இவ்வாறு ராகுல் பேசினார்.
