காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில், எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப் படைத் தன்மையோடு தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற, எங்கள் கருத்து ஏற்கப்படவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டு விட்டது.
உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை, தமிழக காங்கிரஸ் கட்சிக்காக, ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத சிலர் விற்றுத் தின்பதை பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்க முடியாது.
பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மட்டும் கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாக பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
– ஜோதிமணி, காங்., – எம்.பி.,

Source link