காந்தி மியூசியத்தில் முதல்வர் பேசிய நான்கு வார்த்தை!

கோவை: கோவைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், போத்தனுாரில் உள்ள மகாத்மா காந்தி மியூசியத்தை, நேற்று பார்வையிட்டார்.

மகாத்மா காந்தி, 1934 பிப். 6, 7ம் தேதிகளில் கோவைக்கு வந்தபோது, ஜி.டி., நாயுடுவிற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அந்த இடம் புனரமைக்கப்பட்டு, தற்போது காந்தி மியூசியமாக செயல்படுகிறது.

இங்கே நேற்று வந்த முதல்வர் ஸ்டாலின், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், கை ராட்டை மற்றும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற காந்தியின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை பார்வையிட்டார்.

காந்தி சிலைக்கு மலர் துாவிய பின், வளாகத்திற்குள் செண்பக மரக்கன்று நட்டார். பாரதீய வித்யாபவன் பள்ளியை சேர்ந்த ஆறு மாணவிகள் மற்றும் பஜனை பாடல் குழுவினர் இணைந்து, காந்தி விரும்பி கேட்கும், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை பாடினர்.

பாரதீய வித்யாபவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், இரு வார்த்தை பேசும்படி, முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘ அனைவருக்கும் வணக்கம்’ என்றார். இன்னும் நான்கு வார்த்தைகள் பேசுமாறு கேட்டதும்,’ மீண்டும் அனைவருக்கும் நன்றி வணக்கம்’ என முடித்தார்.

Source link