காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மீனவர்கள் 12 பேரும் படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
