'காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான ஆண்டு வரம்பு குறைக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில்

‘காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான ஆண்டு வரம்பு குறைக்கப்படும்’ என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதும், காவலர்கள் தங்களின் பல ஆண்டு கனவு நிறைவேறப் போகிறது என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், காட்சிகள் மாறின. காவலர்களின் நம்பிக்கை பொய்த்து போனது. தி.மு.க., ஆட்சியில், பல்வேறு துறை அமைச்சர்கள், சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அந்த வரிசையில், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்த காவல் துறையிலும், பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை.

அவற்றின் விபரம்:

* குற்ற நிகழ்விடத்தை பார்வையிடவும், விசாரணையை வலுப்படுத்தவும், மாநிலத்தில் எல்லா மாவட்டங்களுக்கும், 38.25 கோடி ரூபாயில், நடமாடும் தடய அறிவியல் வாகனங்கள் வழங்கப்படும்

* இரண்டாம் நிலை காவலர்கள், ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தால், முதல் நிலை காவலராக பதவி உயர்வு வழங்கப்படும். முதல் நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததும், தலைமைக் காவலர்களாகவும்; 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், சிறப்பு எஸ்.ஐ.,க்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும்

* ஆட்சிக்கு வந்ததும், இரண்டாம் நிலை காவலர்கள் பதவி உயர்வுக்கான கால வரம்பு மாற் றப்படவில்லை. முதல் நிலை காவலர்கள் ஏட்டாக பதவி உயர்வு பெறுவதற்கான கால வரம்பில், மூன்று ஆண்டுகள் குறைக்கப்பட்டன. ஆனால், ஏட்டாக 23 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் தான், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது காவலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள து.

* சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லுாரி வளாகத்தில், சைபர் குற்றத்தடுப்பு பிரிவுக்கு, 20 கோடி ரூபாயில் நிர்வாக கட்டடம் கட்டப்படும்

* தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்

* டி.ஜி.பி., அலுவலகத்தில், புதிய கட்டடம் கட்டப்படும்

* பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்கள் மற்றும் குற்றப்பிரிவில் கைப்பற்றப்படும் பொருட்களை வைக்க, சென்னை மற்றும் எல்லா மாவட்டங்களிலும், 3.84 கோடி ரூபாய் செலவில் கிடங்கு அமைக்கப்படும். இந்த அறிவிப்பு சென்னையில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது

* சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், செயற்கை இழை ஓடுதளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்த, நவீன விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்

* எல்லா போலீஸ் நிலையங்களுக்கும், கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் படிப்படியாக வழங்கப்படும்

* சென்னை மாநகர காவல் துறைக்கு புதிய இணையதளம் உருவாக்கப்படும்

* மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்கள் சார்பில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். இந்த அறிவிப்பை ஒன்றிரண்டு கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்

* குற்றவாளிகளை கைது செய்ய, ரிமோட் வாயிலாக விலங்கிடும் 25 கருவிகள் வாங்கப்படும்.

* மத்திய குற்றப்பிரிவுக்கும், தமிழக முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வதற்கும், தனிப்பிரிவு உருவாக்கி பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

Source link