இந்நிலையில் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது. இதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுக்கும் வணிக காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் இலவச லட்டு பிரசாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பக்தர்களுக்கு விற்கப்படும் பிரசாதங்களான முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகளும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தயாரிக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பக்தர்களுக்கு புளிசாதம், சர்க்கரை பொங்கல் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
