அட்சய திருதியை நாளில் கும்பகோணத்தில் நடைபெறும் 14 கருடசேவை விழாவில் இந்த ராமசாமியும் கருடன் மீதேறி அருளுவார். அவருடன் கும்பகோணம் சார்ங்கபாணி, சக்கரபாணி, ராஜ கோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் ஸ்ரீபட்டாபிராமர், மல்லுக தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி உள்ளிட்ட 11 பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். இங்கு ராம நவமி உற்சவம் வெகு பிரசித்தம்.

இங்கே கோயில்கொண்டுள்ள பட்டாபிஷேக ராமரை தரிசித்தால் நியாயமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது உறுதி. எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கும்பகோணம் சென்று ராமசாமி கோயிலை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.
