குல்தீப் யாதவ்-வன்ஷிகா திருமணம்

டேராடூன்: இந்தியாவின் குல்தீப் யாதவ், வன்ஷிகா திருமணம் கோலாகலமாக நடந்தது.

இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் 31. இடது கை மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான இவர், சமீபத்தில் ‘டி-20’ உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

மார்ச் 14ல் தனது பள்ளி பருவ தோழியான வன்ஷிகா சிங் சதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் குல்தீப். இவர்களது திருமண நிகழ்ச்சி, உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை நகரமான முசூரி என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர்களான திலக் வர்மா, ரிங்கு சிங், யுவேந்திர சகால், முகமது ஷமி, ஆர்.பி. சிங், ரெய்னா உள்ளிட்டோருடன் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Source link