எனவே, மேற்கு ஆசியாவில் வாழும் இந்தியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுறுத்துகிறேன்.
ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு, காங்கிரஸ் கூட்டணி மீது கேரள மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனவே வரும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த மார்ச் 29-ம் தேதி பாலக்காடு, திருச்சூர் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து திருவல்லா மற்றும் திருவனந்தபுரத்தில் அவர் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.
