திருவனந்தபுரம்: கேரள தேர்தல் பிரச்சாரத்தில் மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரம் தீவிரமடைந்திருக்கிறது. இதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மூன்று அணிகள் சார்பிலும் அதிதீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரம் தீவிரமடைந்திருக்கிறது. இதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
