கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாகை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு ரத்து

மேலும் அந்த சிறு​வனை நாகப்​பட்​டினம் இளஞ்​சிறார் சீர்​திருத்​தப்​பள்​ளி​யில் அடைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில், சிறு​வர் சீர்​திருத்​தப்​பள்ளி இல்லை எனக்​கூறி அந்த சிறு​வனை கடலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தனர். இந்​நிலையில் 17 வயது சிறு​வனுக்கு எதி​ரான இந்த வழக்கை நாகப்​பட்​டினம் அமர்வு நீதிமன்​றம் விசா​ரித்​தது தவறு என்​றும், கடலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தது அதை​விட தவறு என்​றும் கூறி சிறுவனின் தாயார் சவீதா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் அனிதா சுமந்த், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்த உத்​தர​வு: கொலைக்​குற்​றத்​தில் கைதான 18 வயது பூர்த்​தி​யடை​யாத சிறு​வன் மீதான வழக்கை மற்ற நபர்​களு​டன் சேர்த்து அமர்வு நீதி​மன்​றம் விசா​ரித்​தது சட்​டப்​படி தவறு. மேலும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில் சிறு​வர் சீர்​திருத்​தப்​பள்​ளி​யில் சேர்க்​காமல், கடலூர் சிறை​யில் அடைத்தது சட்​ட​விரோதம்.

Source link