மேலும் அந்த சிறுவனை நாகப்பட்டினம் இளஞ்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இல்லை எனக்கூறி அந்த சிறுவனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 17 வயது சிறுவனுக்கு எதிரான இந்த வழக்கை நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது தவறு என்றும், கடலூர் மத்திய சிறையில் அடைத்தது அதைவிட தவறு என்றும் கூறி சிறுவனின் தாயார் சவீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: கொலைக்குற்றத்தில் கைதான 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் மீதான வழக்கை மற்ற நபர்களுடன் சேர்த்து அமர்வு நீதிமன்றம் விசாரித்தது சட்டப்படி தவறு. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்காமல், கடலூர் சிறையில் அடைத்தது சட்டவிரோதம்.
