கோ ட்டயம் கென்னல் கிளப் சார்பில், மார்ச் 8ம் தேதி, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் நாகம்படம் மைதானத்தில், நாய் கண்காட்சி நடக்கிறது.
சாகச திறமைகளை வெளிப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கும் உங்கள் பப்பிக்கு, மேடை அமைத்து தருகிறது, கோட்டயம் கென்னல் கிளப். அனைத்து இனங்கள் மற்றும் இந்திய இனங்களுக்கான, 36, 37வது நாய்கள் கண்காட்சி,கோட்டயம் மாவட்டத்தில், நாகம்படம் மைதானத்தில் காலை 10:00 மணி முதல் நடக்கிறது. கொளுத்தும் வெயிலால் உங்கள் பப்பி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, உள்ளரங்கம் முழுக்க ஏசி., வசதி செய்யப்பட்டுள்ளது. பார்வையாளராக பங்கேற்றும், நாய் கண்காட்சியை கண்டுகளிக்கலாம். கூடுதல் தகவலுக்கு, www.dogsnshows.com.
