“கோயில் நகைகளை யாருக்கும் தெரியாமல் உருக்கிவிட்டது திமுக அரசு”

அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும், என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகிறது. அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் உற்பத்தி பெருகியிருக்குது.

திமுக என்ன செய்தது? திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 15 லட்சத்து கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது என்று ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார், இதனால் 36 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாம், 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். நிலம் எடுக்க வேண்டும், நிதி ஆதாரம் வேண்டும், அனுமதி வாங்க வேண்டும், கட்டடம் கட்ட வேண்டும், அதன் பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும். அதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், அவர் கடந்த ஆண்டு தான் அறிவித்தார், உடனே பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம். ஒரு மாவட்டத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும், எல்லாம் பொய். ஊடகம் உண்மை செய்தியை வெளியிட்டால் திமுக டெபாசிட் கூட வாங்காது.

Source link