’கடலை மிட்டாய்’ என்றாலே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் எனக் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாயில் 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடலை மிட்டாய்இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் வளைகுடா போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம், “சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீர்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலமும், கப்பல் மூலமும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
இந்தப் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம் அடைந்துள்ளன. கடலை மிட்டாய் உற்பத்திஅத்துடன் உற்பத்தி முடங்கும் சூழலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், பி.பி. கவர், பிளாஸ்டிக் ஜார் உள்ளிட்டவையின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. ஏற்கெனவே நிலக்கடலையின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் கடலை மிட்டாய் உற்பத்தியைப் பாதிக்கிறது” என்றார்.
