“மம்தா பானர்ஜி எனது தங்கையைப் போன்றவர். நானும் மேற்கு வங்கத்தின் மகள் தான்.
ஆனால், என்னை ஏன் இங்கு வர அனுமதிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை.
அவர் அதிருப்தியாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதனால் தான், இடம் மாற்றப்பட்டதா?
பொதுவாக, ஜனாதிபதியை வரவேற்க முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் வர வேண்டும். ஆனால், அவர்கள் வரவில்லை.
சமீபத்தில் தான் இங்கே ஆளுநர் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் வரமுடியவில்லை என்பது புரிகிறது” என்று பேசியிருந்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்தச் செயலை பாஜக, “அரசியலமைப்பு ஒழுக்கத்தின் முழுமையான சரிவு’ என்று விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடியும், ‘இந்தச் செயல் அவமானகரமானது’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
