உலகளாவிய மூலதனத்தை ஈர்ப்பதில் இந்தியா எப்போதும் திறந்த மனதுடனும் வரவேற்புடனும் செயல்படுகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளை எளிதாக அணுகுவதற்கும், சந்தையின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் செபி தொடர்ந்து துணைநிற்கும்.
அன்னிய முதலீட்டாளர்களுக்கான பதிவு நடைமுறைகள் மற்றும் கே.ஒய்.சி., விதிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. செபியின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எப்போதும் வெளிப்படையானதாகவும், அபாயங்களை குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
சர்வதேச அளவில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், இந்திய சந்தைகள் மிகுந்த நிலைத்தன்மையுடன் காணப்படுகின்றன. ஐ.பி.ஓ., வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று முதலீட்டு நிதியங்களின் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் அபரிமிதமான பங்கேற்பு ஆகியவை இந்திய பங்கு சந்தைகளுக்கு கூடுதல் வலுவை தந்துள்ளன.
– துஹின் காந்த பாண்டே
தலைவர், செபி
