சந்தை சரிந்தாலும் அதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு முதலீடு

போர் பதற்றத்தால் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு மீது கொண்டுள்ள நம்பிக்கை குறையவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளில் 25,978 கோடி ரூபாய் புதிய முதலீடுகள் வந்துள்ளன. இது, ஜனவரி மாதத்தை விட 8 சதவீதம் அதிகமாகும்.

காரணங்கள் 1 இந்திய – அமெரிக்க ஒப்பந்தம், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது 2 மியூச்சுவல் பண்டு துறையின் மொத்த சொத்து மதிப்பு, பிப்ரவரியில் 82 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு 3 சரியும் சந்தையில், மலிவான விலையில் யூனிட்கள் கிடைக்கின்றன 4 புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய முன்வருவது.

எந்த பண்டில் எவ்வளவு முதலீடு? பண்டுகள் முதலீடு (ரூ.கோடியில்) (பிப்ரவரி 2026) மல்டிகேப் 1,933.53 லார்ஜ்கேப் 2,111.68 லார்ஜ் மற்றும் மிட்கேப் 3,137.73 மிட்கேப் 4,002.99 ஸ்மால்கேப் பண்டு 3,881.06 டிவிடெண்ட் யீல்டு 21.22 வேல்யூ பண்டு/கான்ட்ரா 727.07 போகஸ்டு 900.72 செக்டோரல்/தீமேடிக் 2,987.29 இ.எல்.எஸ்.எஸ்., -650.02 பிளெக்ஸி கேப் 6,924.65 ——————- மொத்தம் 25,977.91 ————————-

கோல்டு, சில்வர் இ.டி.எப்., சரிவு  பிப்ரவரி மாதத்தில் கோல்டு இ.டி.எப்.,கள் ஈர்த்த முதலீடு, 5,254 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், இது 24,039 கோடி ரூபாயாக இருந்தது.  வெள்ளி இ.டி.எப்.,களில் இருந்து பிப்ரவரி மாதத்தில் நிகர அளவில் 826 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.  பிப்ரவரியில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால், புதிய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டியதும், ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் லாபத்தை எடுத்ததும் இந்த சரிவுக்கு காரணம். பயம் தேவையில்லை ”நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்கள், தற்போதைய போர் சூழல் காரணமாக ஏற்பட்டிருக்கும் சரிவை பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்மால்கேப், மிட்கேப், லார்ஜ்கேப் என பிரித்து முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், சராசரி லாபத்தை நிச்சயம் ஈட்டலாம்”. இவ்வாறு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link