பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் போலீஸார் தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் விசாரித்து 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
பின்னர் இவர்களுக்கான தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும், 9 பேரின் உடல் நிலை, மனநிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
