சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிய அரசு பேருந்து

குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் ஸ்டுடியோ நடத்தி வரும் பாகுலேயன் நாயர் , இவர் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு பேருந்து குறுகிய சாலையில் அதி வேகமாக வந்து இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

பேருந்து பலமாக மோதி கீழே விழுந்த இவரின் உடலில் நெஞ்சு, கை உட்பட பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Source link