இந்த விவகாரத்தைச் சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பான விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கும் அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்கும் வகையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், டிஜிபி, மால்டா மாவட்ட ஆட்சியர், எஸ்எஸ்பி உள்ளிட்டோர் ஆன்லைனில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
