பெட்ரோலிய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பால் கண்ணாடி, எஃகு, பேக்கேஜிங் மற்றும் மருந்து உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு பயன்படுத்திய சிலிண்டர் அளவில் 70 சதவீதத்தை விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இருப்பினும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ள இந்த முக்கிய துறைகள் அனைத்திற்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு 0.2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டே எரிவாயு விநியோகம் செய்யப்படும்.
இதற்கு முன்னதாக 5 கிலோ சிலிண்டர்களை வாங்குவதற்கு, எவ்வித முகவரி சான்றும் தேவையில்லை என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
