விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வானூர் ஒலக்கூர் மயிலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 1150 பேர் அதிமுகவிலிருந்து விலகி இருக்கிறார்கள்.இன்று காலை விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலமாக புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரை வந்து அவர்கள் அங்குள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு அதிமுக தலைமைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் ஆதரவாளர்கள் 1150 பேரின் ராஜினாமா கடிதத்தோடு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தலைமை அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.. அவருடன் அதிமுக நிர்வாகி பாலசுந்தரம் உடன் வருகை தந்தார்.

பின்னர் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன்
தலைமை சரியில்லை அதன் காரணமாகவே நாங்கள் ராஜினாமா செய்கிறோம் நாங்கள் யாருடைய தூண்டுதலின் பெயரிலும் ராஜினாமா செய்யவில்லை என்று கூறினார்.
