சீட்டு மறுக்கப்பட்டதால் காங்கிரஸில் இருந்து ஹசீனா சையத் விலகல்|TN Mahila Congress Chief Resigns, Targets State Leadership

அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும்

மாணவர் காங்கிரஸ் முதல் 2008-ஆம் ஆண்டு யூத் காங்கிரஸின் “டேலண்ட் ஹண்ட்’ (Talent Hunt) திட்டத்தின் மூலம் உங்களால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கப்பட்டது வரை, கடந்த 3 தசாப்தங்களாக நான் இக்கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறேன்.

ஆனால் இப்போது எனது கண்ணியமும் சுயமரியாதையும் சமரசம் செய்யப்பட்டதாக உணர்கிறேன். எனக்கே நீதி மறுக்கப்படும் போது, எனது கட்சி நிர்வாகிகளுக்கு 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு உரிமையை என்னால் எப்படிப் பெற்றுத் தர முடியும்?

எனவே, நான் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். இருப்பினும், எனது கட்சி மற்றும் காந்தி குடும்பத்தின் மீதான எனது அன்பு என்றும் தொடரும்.

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

எனது ஒரே கேள்வி இதுதான்: மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் போன்ற ஒரு மூத்த தலைவர், நமது மாநில காங்கிரஸ் தலைவரின் ஊழல் அமைப்பிற்கு இந்த அளவிற்கு ஆதரவாக இருப்பது எப்படி?

இதனால் உண்மையான தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்த முறைமை சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது, இது கட்சிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும்”.

இவர் இந்தக் கடிதத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ளார்.

Source link