சுதீஷின் 20 ஆண்டு கனவு தி.மு.க., கூட்டணியால் நனவானது

நமது நிருபர்

தே.மு.தி.க., பொருளாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ், அக்கட்சி சார்பில் குடியாத்தம் சட்டசபை தொகுதியில், 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன்பின், கள்ளக்குறிச்சி, சேலம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டும் தோல்வியை தழுவினார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த போது, ராஜ்யசபா எம்.பி., பதவியை சுதீஷுக்கு தர வேண்டும் என்று பேச்சு நடத்தப்பட்டது.

இது தொடர்பாக, ஒப்பந்தம் கையெழுத்தானதாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். அதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நிராகரித்தார். இதனால், சுதீஷின் எம்.பி., கனவு 20 ஆண்டு காலமாக நிறைவேறாமல் இருந்தது.

தற்போது, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா பதவி ஒதுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் சுதீஷ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., கூட்டணி வாயிலாக, அவரது 20 ஆண்டுகால எம்.பி., கனவு நனவாகி உள்ளது.

Source link