சென்னையில் ஒரேயொரு தொகுதி.. பாஜகவுக்கு மயிலாப்பூர் தொகுதி மட்டுமே.. போட்டி பயமா? – reason for one seat allocation in chennai for bjp, which is contesting in aiadmk alliance

திமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள 27 தொகுதிகளில், சென்னையில் ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய அம்சங்கள்:
  • சென்னையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே
  • மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு
  • திமுக மற்றும் தவெகவின் போட்டிதான் காரணமா?
Edappadi Palaniswami and Nainar Nagenthran
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி தொடங்கப்பட்டு அதே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (மார்ச் 25 ஆம் தேதி), அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பாஜகவுக்கு 27 தொகுதிகள்

அதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராசிபுரம் (தனி), பத்மநாபபுரம், குளச்சல், ராமநாதபுரம், மானாமதுரை (தனி), அறந்தாங்கி, திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஆவடி , விளவங்கோடு, நாகர்கோயில், ராதாபுரம், வாசுதேவநல்லூர் (தனி), திருச்செந்தூர், சாத்தூர், மதுரை தெற்கு, திருப்பத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், அவிநாசி (தனி), உதகமண்டலம், மொடக்குறிச்சி, தளி, மயிலாப்பூர் ஆகிய 27 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரேயொரு தொகுதி மட்டுமே

அதில் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்பட்டால், சென்னை நகரில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் ஒரேயொரு தொகுதி மட்டுமே, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் என்று கூறப்படும் சென்னையில் ஒரேரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பது, பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தொகுதி ஒதுக்கினால் என்ன, அந்த தொகுதியிலும் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிக்கனியை நாட்டுவோம் என்றும் ஒரு சில பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர.

BJP List
மயிலாப்பூர் தொகுதி ஏன்?

அந்த ஒரேயொரு தொகுதியும் இந்துத்துவா அடிப்படையிலான மயிலாப்பூர் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியிருக்கிறது. இதை அவர்களே கேட்டுப் பெற்றார்களா? இல்லை.. அதிமுகவே முன்வந்து ஒதுக்கீடு செய்து இருக்கிறதா? என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.
இந்துக்கள் அதிகமாக இருக்கும் தொகுதி என்பதனால், தங்களால் மயிலாப்பூர் தொகுதியில் கூடுதல் ஓட்டுகளை பெற்று, வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்று பாஜக இந்த தொகுதிக்கு முறையிட்டுள்ளதாக தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஆர்வம் காட்டாத கட்சிகள்

அதே போல பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளிலும் பார்த்தால், முக்கிய கோயில்கள் இடம் பெற்றிருக்கும் தொகுதிகளும் அடங்கியுள்ளன. ஆனால் சென்னையில் ஒரே ஒரு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கியது ஏன் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது.
இதற்கு முன்னதாகவே சென்னையில் உள்ள தொகுதிகளை பெறுவதில் பாஜக மற்றும் பாமக இரண்டு கட்சிகளும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. காரணம் அதில் தங்களின் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியை நிலை நாட்ட முடியாது என்று இரண்டு கட்சிகளும் நினைத்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.

போட்டி பயமா?

அதையும் மீறி சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், பாஜக, பாமக இரண்டு கட்சிகளுக்கும் ஒருவேளை அதிக தொகுதிகளை ஒதுக்கி இருந்தால், தங்களின் பலத்தை இழந்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகலாம் என்று கருதி இருக்கலாம்.
அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், சென்னையை பொறுத்தவரை திமுகவின் கைகள் ஓங்கி காணப்படுவதாக பாஜக கருதுகிறது. மேலும் புதிய வரவாக இருக்கும் தவெக போட்டியாலும், வாக்குகள் சிதறக்கூடும் என்பதால் இந்த முடிவை பாஜக மற்றும் பாமக எடுத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2026 தேர்தலில் Vijay தனித்து போட்டியிடுவாரா? முடிவான தேர்தல் களம் விவரம்

சென்னையில் பாஜகவுக்கு எப்படி ஒரேயொரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல பாமகவுக்கும் பெரம்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.