சென்னை: “சட்டசபை தேர் தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட, நாளை முதல் விருப்ப மனு பெறப்படும்,”

சென்னை: “சட்டசபை தேர் தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட, நாளை முதல் விருப்ப மனு பெறப்படும்,” என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கும் நிலையில், ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என, தி.மு.க., தரப்பு கூறி வருகிறது.

இந்நிலையில், ‘வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தலில் போட்டியிட விரும்புவோர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும். மார்ச் 21 முதல் 24ம் தேதி வரை, 38 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படும்.

‘விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய்; விருப்ப மனு கட்டணம் 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Source link